கேதுவின் பலன்கள்:
இதுவரை உங்களின் ராசிக்கு பதினோராவது வீட்டில் அமர்ந்து நல்ல பலன்களைத் தன்னால் முடிந்த வரை கொடுத்து வந்த கேது பகவான் இப்போது பத்தாவது வீட்டில் வந்தமர்கிறார். தன்னம்பிக்கை போக்கு அதிகரிக்கும். எடுத்த வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பீர்கள். வேலையில்லாமல் திண்டாடியவர்களுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு தேடி வரும். வேற்று மதத்தினரால் புதிய அனுபவங்களை காண்பீர்கள். தந்தை வழி உறவினர்களால் கொஞ்சம் செலவுகளும், அலைச்சலும் வந்து நீங்கும்.
26. 8. 2009 முதல் 27. 10. 2009 முடிய உள்ள கால கட்டங்களில் தடைபட்ட பல வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். பேச்சில் கம்பீரம் பிறக்கும். கணவன்- மனைவிக்குள் நிலவிய வீண் வாக்குவாத போக்கு மாறும். பிள்ளைகளுடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். சொத்து சம்பந்தமான முக்கிய படிவங்களில் கையெழுத்திடும் போது ஒரு முறைக்கு பல முறை படித்துப் பார்த்து கவனமுடன் கையாளுங்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். கௌரவப் பட்டங்கள் கிடைக்கும். வி. ஐ. பி.க்களின் சந்திப்பு நிகழும். உடன்பிறந்தவர்களுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். அக்கம்- பக்கம் வீட்டாருடன் அனுசரித்துப் போவீர்கள்.
உத்யோகத்தில் வேலை பளு அதிகரித்தாலும் தெரியாத சில வேலைகளையும் கற்றுக் கொள்ளும் புதிய அனுபவம் உண்டாகும். உயர் அதிகாரியின் ஆதரவால் பதவி உயர்வு, சம்பள உயர்வுக் கிடைக்கும். புதிய சலுகைகளை அறிமுகப்படுத்துவீர்கள். சக ஊழியர்களும் உங்களை எதிர்ப்பார்கள். மேலதிகாரியைப் பற்றி சக ஊழியர்களின் மத்தியில் விமர்சனம் செய்ய வேண்டாம். பதவி உயர்வால் ஊர் விட்டு ஊர் மாற்றம் அடைவீர்கள். மாணவர்கள் வகுப்பறையில் கவனம் செலுத்த வேண்டும்.
பரிகாரம்:
நாகப்பட்டினத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு நீலாயத்தாட்சியம்மை உடனுறை ஸ்ரீ ஆதிபுராணேஸ்வரர், ஸ்ரீ காயாரோகணேஸ்வரரை பூமாலை அணிவித்து வணங்குங்கள்.