சிம்மம்:
செவ்வாய், 8 ஏப்ரல் 2008( 20:21 IST )
கேதுவின் பலன்கள்:
இதுவரை உங்களின் ராசியிலேயே அமர்ந்து தலைச் சுற்றல், நெஞ்சு வலி, மனக் குழப்பங்களை தந்த ராகு இப்போது பன்னிரெண்டில் சென்று அமர்கிறார்.
9. 4. 2008 முதல் 15. 12. 2008 முடிய உள்ள காலக்கட்டங்களில் தடைபட்ட காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். இதுவரை வேடிக்கையாகப் பேசி வந்த நீங்கள் இனி விவேகமாகவும் நடந்துக் கொள்வீர்கள். பேச்சில் முதிர்ச்சித் தெரியும். சின்ன சின்ன வலிகளை எல்லாம் ஏதேனும் பெரிய நோய்களின் தாக்கம் இருக்குமோ என அச்சப்பட்டீர்களே! இனி அந்த பயம் விலகும். இனி ஆரோக்கியம், இளமை, அழகு கூடும். மகிழ்ச்சியில் திகைப்பீர்கள்.
16. 12. 2008 முதல் 25. 8. 2009 உள்ள காலகட்டங்களில் அவசர முடிவுகளை தவிர்க்கப்பாருங்கள். முன்கோபம், வீண் பகை வரக்கூடும். வாகனப் பழுது நீங்கும். முக்கிய புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள். உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். 26. 8. 2009 முதல் 27. 10. 2009 வரை புது முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். மனக் குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். அவர்களின் தேவையறிந்து உதவுவீர்கள். மகனுக்கு திருமணப் பேச்சு வார்த்தையில் முன்னேற்றம் ஏற்படும். பால்ய நண்பர்களின் சந்திப்பினால் மகிழ்ச்சி அடைவீர்கள். மாணவர்களின் படிப்பில் அதிக கவனம் செலுத்துவீர்கள். நினைவாற்றல் அதிகரிக்கும். விளையாட்டுப் போட்டிகளில் பரிசையும், பாராட்டையும் பெருவீர்கள். கன்னிப் பெண்களுக்கு கற்பனைத்திறன் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் வெற்றிக் கிட்டும்.
பரிகாரம்:
விருத்தாசலத்திற்கு தெற்கே ஏழு கிலோமீட்டர் தொலைவில் நாகேந்திரப்பட்டினம் எனும் ஊரில் எழுந்தருளியுள்ள நீலமலர்க்கண்ணியம்மை உடனுறை நீலகண்ட நாயகேச்சுரரை வணங்குங்கள்.