ரா‌சி பல‌ன் | ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள் | எ‌ண் ஜோ‌திட‌ம் | டார‌ட் | க‌ட்டுரைக‌ள் | ப‌ரிகார‌ங்க‌ள் | ஆலோசனை | பூ‌ர்‌வீக ஞான‌ம் | கே‌ள்‌வி-ப‌தி‌ல் | வா‌ஸ்து | ‌பிரபல‌ங்க‌ள்
முதன்மை பக்கம் ஆன்மிகம் » ஜோ‌திட‌ம் » ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள் » கடகம்:
‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Feedback Print Bookmark and Share
 
கேதுவின் பலன்கள்:

இதுவரை உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் நின்று கொண்டு பக்குவமில்லாமல் பேச வைத்த கேது பகவான், இப்போது உங்கள் ராசியிலேயே வந்தமருகிறார். சமயோஜித புத்தியுடன் இனி பேசுவீர்கள். எப்போது பார்த்தாலும் எதிர்மறையாக சிந்தித்த நீங்கள் இனி ஆக்கப்பூர்வமாக செயல்படுவீர்கள். 9. 4. 2008 முதல் 15. 12. 2008 முடிய உள்ள காலகட்டங்களில் ஆயில்யம் நட்சத்திரக்காரர்கள் கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது. உடல் நலம் பாதிக்கும். பண இழப்பு, வீண் பகை வந்துபோகும். வழக்குகளில் கவனம் தேவை. பூர்வீக சொத்தினால் சிறு சிறு பிரச்சனைகள் வந்து நீங்கும்.

16. 12. 2008 முதல் 25. 8. 2009 முடிய உள்ள காலக்கட்டங்களில் பூசம் நட்சத்திரக்காரர்களுக்கு மன உளைச்சல், விரையச் செலவுகள் வந்துபோகும். மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். அக்கம் பக்கம் வீட்டாருடன் குடும்ப விஷயங்களை சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். திடீர் பயணங்கள் உண்டாகும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த குழப்பங்கள் வந்து விலகும். தியானம், யோகாவில் ஈடுபடுவது நல்லது. ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.

26. 8. 2009 முதல் 27. 10. 2009 வரை உள்ள காலக்கட்டங்களில் புனர்பூசம் நட்சத்திரக்காரர்கள் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்கப் பாருங்கள். குடும்பத்தினரின் உணர்வுகளை புரிந்துக் கொள்ளாமல் சட்டென்று பேசுவதை தவிர்க்கப் பாருங்கள். மாணவ-மாணவிகள் பாடங்களை சேகரித்து வைத்து ஒன்றாக படிக்காமல் அன்றைய பாடங்களை உடனே முடிப்பது நல்லது. கன்னிப் பெண்களுக்கு வயிற்று வலி, உயர் கல்வித் தடை வந்து விலகும். 2008 முற்பகுதியில் எதிர்பாராத பண வரவு, சொத்து சேர்க்கை, பிள்ளைகளின் திருமணம் யாவும் நிகழும்.

பரிகாரம்:

தஞ்சாவூருக்கு அருகில் ஒன்பது கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள புன்னைநல்லூர் மாரியம்மனை வணங்குங்கள்.