மிதுனம்:
செவ்வாய், 8 ஏப்ரல் 2008( 20:29 IST )
கேதுவின் பலன்கள்:
இதுவரை உங்கள் ராசிக்கு மூன்றாவது வீட்டில் அமர்ந்து கொண்டு தைரியத்தையும், விடாமுயற்சியையும் தந்த கேது பகவான் இப்போது இரண்டாவது வீட்டில் நுழைகிறார். முன்னுக்குப் பின் முரணாக பேசி வந்த சகோதர, சகோதரிகள் இனி உங்களை அனுசரித்துப் போவார்கள். சாதுர்யமான பேச்சால் சாதிப்பீர்கள். உங்களை குறை கூறியவர்களுக்கு பதிலடி கொடுப்பீர்கள். தரக்குறைவாக பேசியவர்கள் மனம் திருந்தி வந்து மன்னிப்புக் கேட்பார்கள். பல் வலி, கண் எரிச்சல்கள் வந்து நீங்கும். அத்தியாவசியச் செலவுகள் அதிகரிக்கும். மகளின் திருமணப் பேச்சு வார்த்தையிலிருந்த சிக்கல்கள் நீங்கி திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். வெளிநாட்டில் இருப்பவர்களின் உதவியால் மகனுக்கு நல்ல உத்யோகம் கிடைக்கும்.
விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளப் பாருங்கள். யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். 16. 12. 2008 முதல் 25. 8. 2009 முடிய உள்ள காலத்தில் திடீர் பணவரவு, செல்வாக்கு பெருகும். மாணவ, மாணவிகளே! அதிகாலையில் எழுந்துப் படியுங்கள். விடைகளை எழுதி பாருங்கள். 26. 8. 2009 முதல் 27. 10. 2009க்குள் அரசால் அனுகூலம் உண்டாகும்.
பரிகாரம்:
மதுரை ஸ்ரீ மீனாட்சியம்மனையும் உடனுறை ஸ்ரீ சொக்கநாதரரையும் நேரில் சென்று வணங்குங்கள்.