ரா‌சி பல‌ன் | ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள் | எ‌ண் ஜோ‌திட‌ம் | டார‌ட் | க‌ட்டுரைக‌ள் | ப‌ரிகார‌ங்க‌ள் | ஆலோசனை | பூ‌ர்‌வீக ஞான‌ம் | கே‌ள்‌வி-ப‌தி‌ல் | வா‌ஸ்து | ‌பிரபல‌ங்க‌ள்
முதன்மை பக்கம் ஆன்மிகம் » ஜோ‌திட‌ம் » ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள் » ரிஷபம்:
‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Feedback Print Bookmark and Share
 
கேதுவின் பலன்கள்:

இதுவரை உங்களின் ராசிக்கு நான்காவது வீட்டில் அமர்ந்து உங்களை நாலாவிதத்திலும் அவஸ்தைப்படுத்திய கேது பகவான் இப்போது மூன்றாவது வீட்டிலே முகமலர்ந்து அமர்கிறார்.

கணவன்- மனைவிக்குள் தாம்பத்யம் இனிக்கும். குடும்பத்தில் இருப்பவர்களின் வெறுப்பு மாறும் பாசமும், ஒத்துழைப்பும் அதிகரிக்கும். தாயாருடன் இருந்து வந்த கருத்து மோதல் நீங்கும்.அம்மாவின் உடல்நலம் சீராகும். அரைகுறையாக பாதியில் நின்ற கட்டட வேலையை வங்கிகட‌ன் உதவியுடன் முழுமையாக கட்டி முடித்து புது வீட்டில் கம்பீரமாக நுழைவீர்கள்.இளைய சகோதரருடன் பனிப்போர் வந்து நீங்கும்.

16.12.2008 முதல் 25.8.2009 முடிய உள்ள காலகட்டங்களில் கௌரவப் பதவிகள் தேடி வரும். சொத்து சேரும். பிள்ளைகளும் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். புது வாகனம் வாங்குவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் தேடி வருவார்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். சுருங்கிய முகம் மலரும். இளமை கூடும். 26.8.2009 முதல் 27.10.2009 வரை உள்ள காலகட்டத்தில் வெளியூர் பயணங்கள், திடீர் பணவரவு, போட்டிகளில் வெற்றியும் உண்டாகும்.

பரிகாரம்:

கும்பகோணத்தில் ஸ்ரீ மங்களநாயகி அம்மை உடனுறை ஸ்ரீ கும்பேஸ்வரரை நெய் விளக்கு ஏற்றி வணங்குங்கள்.