முதன்மை பக்கம்  ஆன்மிகம் > ஜோ‌திட‌ம் > ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
 
ஸ்ரீசனிப் பெயர்ச்சி பொதுப் பலன்கள்!
Webdunia
நிகழும் சர்வஜித்து வருடம், ஆடி மாதம் 20 ஆம் நாள் (5.8.2007) ஞாயிற்றுக்கிழமை, கிருஷ்ணபட்சத்து சப்தமி திதி, அசுவினி நட்சத்திரம், சூலம் நாம யோகம், பவம் நாம கரணம் கூடிய நேத்திரம், ஜீவன் மற்றும் சித்தயோகம் நிறைந்த நன்னாளில், செவ்வாய் ஓரையில், கதிருதயநேரம் உட்பட நண்பகல் மணி 12.09-க்கு, பஞ்சபட்சியில் வல்லூறின் வலிமை பொருந்திய வேளையில் கடக ராசியிலிருந்து சிம்ம ராசியின் சிம்மாசனத்தில் சனி பகவான் சென்று அமர்கிறார். 5.8.2007 முதல் 25.9.2009 முடிய உள்ள காலம் முழுவதும் சனி பகவான் சிம்ம ராசியில் இருந்து கொண்டு தனது சீரிய கதிர்களைச் செலுத்துவார்.

5.8.2007 முதல் 5.8.2008 முடிய மகம் நட்சத்திரத்திலும்
16.8.2008 முதல் 29.8.2009 முடிய பூரம் நட்சத்திரத்திலும்
30.8.2009 முதல் 25.9.2009 முடிய உத்திரம் நட்சத்திரத்திலும் சனி பகவான் உலா வருகிறார்.
25.12.2007 முதல் 18.3.2008 முடிய மற்றும்
9.1.2009 முதல் 19.5.2008 முடிய உள்ள காலகட்டங்களில் சனி பகவான் வக்ர கதியில் செல்கிறார்.

உலகெங்கும் அதிரடி மாற்றங்களை இந்தச் சிம்மச் சனி ஏற்படுத்துவார். தொலை தொடர்புத் துறை அசுர வளர்ச்சியடையும்.கிராம மக்களிடையே விழிப்புணர்வு அதிகரிக்கும்.அவர்களின் அடிப்படை வசதிகளும் பெருகும்.பழமையான வைத்திய முறையை மக்கள் அதிகம் பின்பற்றுவார்கள். புதிய கோள்கள், நட்சத்திரங்கள் கண்டறியப் படும். நவகிரகங்களில் சூரியனின் உட்கருவின் இயக்கத்தில் மாற்றங்கள் ஏற்படும். இந்தியாவின் அண்டை நாடுகள் வலுவிலக்கும். உலகெங்கும் வாழும் இந்தியர்களின் தனித்திறமைகள் அதிகரிக்கும்.பெரிய பதவிகளில் அமர்வார்கள். மறைமுக மதப்போர் மூளும். நீரிழிவு நோய்,பால்வினை நோய்,புற்று நோய் ஆகியவற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

ஏழை, எளிய மக்கள் எங்கும் வலுவடைவார்கள். பணம் படைத்தவர்கள் தங்களது சொத்துக்களைக் காப்பாற்றிக்கொள்ள அதிகம் போராட வேண்டி வரும். அகிம்சை வழியில் செல்பவர்களுக்கு மக்கள் ஆதரவு கூடும். அடக்குமுறைகளுக்கு எதிராக மக்கள் வெகுண்டு எழுவார்கள். போராட்டங்கள், உண்ணாவிரதங்கள் அதிகரிக்கும். நாட்டை ஆள்பவர்கள் கடுமையான நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டி இருக்கும். பல பிரபலங்களின் அந்தரங்கம் வெளிப்படும். முறையற்ற புணர்ச்சிகள் அதிகரிக்கும். பலர் வக்ர புத்தியுடன் செயல்படுவார்கள்.

சாதி,இனக் கலவரங்கள் புது வடிவில் உருவாகும். காவல்துறை, இராணுவத்தைச் சேர்ந்தவர்களுக்கு வேலைச்சுமை அதிகமாகும். இந்திய எல்லையில் போர் அபாயம் உண்டாகும். அரசியலில் எதிரும், புதிருமாக இருந்தவர்கள் இணைவார்கள். தலைமை மாறும். பல அதிசயங்கள் அரசியலில் நடக்கும்.அறிவிக்கப் படாத நெருக்கடி நிலை நிலவும். எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் பணியில் ஆளுபவர்கள் ஆர்வம் காட்டுவார்கள்.சிலரை திருப்திப்படுத்த புதிய பதிவிகள் உருவாக்கப் படும்.புது மாநிலங்கள் உருவாகும்.

அயல்நாட்டு நிறுவனங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு இந்தியாவில் முதலீடு செய்யும்.உலகின் தட்ப வெப்பநிலை மாறும். சூரியனின் அக்னி வீட்டில் சனி அமர்வதால், பூமியின் மேற்பரப்பில் வெப்பம் அதிகரிக்கும். மாவட்ட பருவ மாற்றங்களால் இயல்பான உணவு உற்பத்தி பாதிக்கும். காடுகள் தீப்பற்றி எரியும். மரப் பயிர்கள், மூலிகைப் பயிர்கள் செய்பவர்கள் ஆதாயம் அடைவார்கள். கடல் சீற்றம், சுனாமி பயம் விலகும். ஆனால் நில நடுக்கம், மலைச்சரிவு, இவற்றால் பாதிப்புகள் அதிகரிக்கும். மந்த வாயுக்களாலும், தொழிற்சாலைக் கழிவுகளாலும், மேலும் சுற்றுப்புறச் சுகாதாரம் கெடும்.
  1 | 2  >> 
மேலும்
சனிப் பெயர்ச்சிப் பலன்கள்
சனிப் பெயர்ச்சிப் பலன்கள் - மேஷம்
சனிப் பெயர்ச்சிப் பலன்கள் - ரிஷபம்
சனிப் பெயர்ச்சிப் பலன்கள் - மிதுனம்
சனிப் பெயர்ச்சிப் பலன்கள் - கடகம்
சனிப் பெயர்ச்சிப் பலன்கள் - சிம்மம்