முதன்மை பக்கம் > ஆன்மிகம் > ஜோ‌திட‌ம் > ப‌ரிகார‌ங்க‌ள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
பெரும் இழப்புகள், பிரச்சினைகள் வரும்போது எப்படி சமாளிப்பது?  Search similar articles
ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்:

சிறிய டீ கடையில் ஆரம்பித்து பெரிய பாஸ்ட் புட் கடைக்கு சொந்தக்காரராகி, மீண்டும் டீக்கடைக்கே வந்த ஒருவர் வந்திருந்தார். அவருக்கு கிரக நிலை அவ்வாறு இருந்தது.

அவரை உங்களுக்கு இந்த கிரகம் வந்த போது இதெல்லாம் கிடைத்தது. பின்னர் அந்த கிரகம் மாறியதும் வந்ததெல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக இழந்தீர்கள்.

இது இத்தனை நாட்களுக்கு நீடிக்கும். அதுவரை கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டும் என்று கூறினேன்.

அந்த சமயத்தில் கோபம் வரும், பொறாமை, ஆத்திரம் வரும். தன்னிடம் வேலை செய்து கொண்டிருந்தவன் வேறு கடை வைத்துவிட்டான் என்ற ஆத்திரத்தில் அடிக்கத் தோன்றும். பின்னர் என்ன காவல்நிலையத்தில் போய் உட்கார வேண்டியதுதான். எனவே அந்த சமயத்தில் பொறுமை காக்க வேண்டும்.

பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டும். பெரிய நிறுவனத்தை வைத்துக் கொண்டு சமாளிக்க முடியாமல் திண்டாடுவதை விட அதனை சிறியதாக்கிக் கொண்டு எளிமையாக வாழ வேண்டும். பின்னர் நேரம் சரியானதும் அதனை கொஞ்சம் கொஞ்சமாக விரிவுபடுத்திக் கொள்ளலாம் என்று அறிவுரை கூறி அனுப்பினோம்.

இந்த சமயங்களில்தான் உணர்ச்சி வயப்படுவது, வழக்குப் போடுவது, இரண்டு தட்டு தட்டிவிடலாமா என்று நினைப்பது போன்றவை தோன்றும். இதெல்லாம் செய்து சிக்கிக் கொள்ளக் கூடாது.

இதுபோல வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைக்கு எளிமையான வாழ்க்கையே சிறப்பாக அமையும்.


1 | 2  >>  
மேலும்
ஒரே வீட்டில் இரண்டு ராசிக்காரர்கள் இருக்கக் கூடாதா?
குழந்தை பாக்கியம் வேண்டுதலால் கிட்டுமா?
நா‌ட்டி‌ற்கு‌‌ம் ப‌ரிகார‌ம் உ‌ண்டா?
ச‌னி‌ப்பெய‌ர்‌ச்‌சி, குரு‌ப்பெய‌ர்‌ச்‌சி தொட‌ர்பான பரிகாரம்!
பரிகாரம் ஒரு வடிகாலே : ஜோதிட ரத்னா வித்யாதரன்!
ஒருவரின் இன்னல்களுக்கு ஜோதிட சாஸ்திர பரிகாரங்கள்!