முதன்மை பக்கம் > ஆன்மிகம் > ஜோ‌திட‌ம் > கே‌ள்‌வி-ப‌தி‌ல்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
கர்நாடகத்தில் திருமணத்திற்கு சென்ற உறவினர்கள் சென்ற லாரி விபத்துக்குள்ளாகி 40 பேர் பலியானது?  Search similar articles
ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்:
இந்த விபத்து நேற்று மதியத்திற்கு மேல் நடந்துள்ளது. நேற்று உத்திரட்டாதி நட்சத்திரம். மேலும் அன்று சிம்ம ராசிக்கு சந்திராஷ்டமம். ஒன்று, மணமகனோ, மகளோ சிம்ம ராசியாக இருக்க வாய்ப்பு உண்டு. யாருடைய நிகழ்வுக்காக அவர்கள் போகிறார்கள் என்பதையும் பார்க்க வேண்டும்.

மணமக்களுக்கு சந்திராஷ்டமமாகவோ, ஜென்ம நட்சத்திரமாகவோ இருக்கலாம். மணமக்களுக்காகத்தானே இவர்கள் போகிறார்கள். அவர்களுக்கு நடக்க வேண்டியது, இவர்களுக்கு நடக்கலாம்.

அந்த லாரியில் 4 ஏழரை சனி, 10 அஷ்டமத்து சனி ஏறியிருந்தால் நிச்சயம் அந்த வாகனம் விபத்துக்குள்ளாகும்.

நடிகை ரோகிணி நடத்தும் கேள்விகள் ஆயிரம் நிகழ்ச்சியில், தர்மபுரி பேருந்து எரிப்பு, ஸ்ரீரங்கம் கல்யாண மண்டபத்தில் தீ விபத்தில் 90 பேர் மரணம், கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் குழந்தைகள் மரணம் எல்லாம் பார்த்தால் மரணத்தைத் தரக்கூடிய தசாபுக்திகள் அவர்களுக்கு இருந்தது தெரிய வந்தது.

மரணத்திற்கான கிரகச் சாரம் இருப்பவர்கள் எல்லாம் ஒன்று சேர்வார்கள். தசாபுக்தி கொஞ்சம் வலுவாக இருப்பவர்கள் இதில் உயிர் பிழைத்துக் கொள்வார்கள். அதாவது பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைவார்கள். தசாபுக்தி சரியில்லாதவர்கள் உயிரிழப்பார்கள்.

பொதுவாக கும்பலாக போவதை இந்த காரணத்திற்காக தவிர்க்கலாம் என்று சொல்லலாமா?

காஞ்சிபுரத்தில் எனக்கு தெரிந்தவர் ஒருவர் இருந்தார். இந்த சம்பவம் 6, 7 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. அவரது குடும்பத்திற்கு சனி தசை நடந்து கொண்டிருந்தது. பெண்ணிற்கு ஏழரை சனி, பையனுக்கு அஷ்டமத்து சனி, இன்னொரு பெண்ணிற்கு சனி தசை, கணவன் - மனைவி இருவருக்குமே ஏழரை சனி நடந்து கொண்டிருந்தது.

அவர்களிடம்..
1 | 2  >>  
மேலும்
அக்னி நட்சத்திரம் எப்படி இருக்கும்?
உலக அளவில் உணவுத் தட்டுப்பாடு, விலைவாசி ஏற்றத்திற்குக் காரணம்?
ஜாதி, மத கலவரம் ஏன் நடக்கிறது?
கட்சிகள் நடத்தும் போராட்டங்களுக்கான காரணம் என்ன?
சிவப்பாக இருக்கும் பெண்களுக்கு கருப்பாக இருக்கும் ஆண்களை பிடிக்குமா?
கர்நாடகத் தேர்தல்: வெற்றி யாருக்கு?