ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்:
இதை அவ்வாறு எடுத்துக் கொள்ள முடியாது. மன எழுச்சிகளில் முக்கியமானது தன்னம்பிக்கை என்பது. தன்னம்பிக்கை அதிகமாகும்போது அது அகங்காரம் ஆகிறது. மற்றவர்களை மதிக்காமல் போவது போன்று இருப்பது அகங்காரம் என்கிறோம்.
பொதுவாக லக்னத்தில் ராகு, கேது போன்ற கிரகங்கள் இருந்தால் இதுபோன்று இருப்பார்கள்.
கேதுவை ஞானக் காரகன் என்கிறோம். அது லக்னத்தில் இருந்தால் நல்லதுதான். ஆனால் இவர்கள் தாமதமாக அகங்காரத்தை வெளிப்படுத்துவார்கள்.
ராகு லக்னத்தில் இருந்தால் அதிகமாக அகங்காரத்தை வெளிப்படுத்துவார்கள். அவர்கள் பேசும்போதே தெரியும். ஆறாம் இடம்தான் வம்புக்கிழுத்தல், சிக்கல்களை உருவாக்குதல் போன்றவை.
அதுபோல் ஆறுக்குரிய கிரகம், இரண்டாம் வீட்டில் அதாவது பேச்சுக்குரிய ஸ்தானத்திற்கு வந்தால் அவர்கள் பேசுவதே ஆணவமான பேச்சு, அகங்காரமான பேச்சாக இருக்கும். பேச்சால் சிக்கல் ஏற்படுத்துதல், குழப்பம், கொள்ளை, கொலை போன்றவற்றை உருவாக்கும்.
சிலர் பேசுவதெல்லாம் பெரிய பெரிய பிரச்சினைகளை ஏற்படுத்துகிறதே, அது ஆறுக்குரியவன் 2ஆம் வீட்டில் இருந்தால்தான் நடக்கும்.
அதே போல், 2ஆம் இடத்தில் சூரியன்- செவ்வாய், சனி-செவ்வாய், சனி - ராகு போன்ற கிரகங்கள் சேர்ந்திருந்தால் அவர்களுக்கும் அகங்கார பேச்சு இருக்கும். நேரடியாக பேசும்போது ஒருவருடன் பேசும்போது தன்மையாக பேசுவது போல் இருக்கும். இருவருடன் மற்றொருவர் சேர்ந்துவிட்டால் அவர்களது பேச்சு தொனி மாறும்.
லக்னாதிபதி நல்ல விதத்தில் இருந்தால் அதாவது மேஷ லக்னம், விருச்சிக லக்னம் போன்று ஒவ்வொரு லக்னத்திற்கும் ஒவ்வொரு அமைப்பு இருக்கும். எனவே லக்னாதிபதி நன்றாக இருந்துவிட்டால் அமைதியாக, நல்லவர்களாக இருப்பார்கள்.
லக்னாதிபதி கெடும்போதோ அல்லது ஆறுக்குரியவன் வலுவடையும் போதோ இதுபோன்று ஏற்படும்.
2ஆம் இடத்தில் பாவ கிரகங்கள் அமர்ந்து, அந்த கிரகத்தை 6 அல்லது 8க்குரிய கிரகங்கள் பார்க்கும்போது அவர்கள் இதுபோன்று அகங்காரத்திற்கு ஆளாவார்கள். அவர்களுக்கு தலைகணம் அதிகமாக இருக்கும். மற்றவர்கள் விஷயத்தில் தலையிடுதல், மற்றவர்களை கெடுக்கும் விதத்தில் செயல்படுதல் போன்றவை இருக்கும்.
|