பண்பாடு என்பதை எப்படி எடுத்துக் கொள்வீர்கள்?
பண்பாடு என்பது பூர்வ புண்ணியஸ்தானம். மூதாதையர், பெற்றோர். அதற்குரிய இடம் 5ஆம் இடம். பண்பாட்டை மதிக்க வேண்டுமா, பின்பற்ற வேண்டுமா அல்லது உடைக்க வேண்டுமா என்பதை முடிவு செய்வது லக்னாதிபதியின் இடம்தான்.
லக்னாதிபதியும் கெட்டு, பூர்வ புண்ணியஸ்தானத்திற்குரிய 5ம் இடமும் கெட்டால்தான் படு மோசமாக நடந்து கொள்வார்கள்.
இப்படி இருக்கும்போது தமிழர்கள் பண்பாடு என்று ஒன்றை எப்படி வைத்திருந்தார்கள்?
பண்பாடு ஒன்று இப்போதும் இருக்கிறது. அப்போதும் பண்பாட்டை மீறுவது, விதி மீறல்கள் என்பது இருந்துள்ளது.
சதவீதம் குறைவாக இருந்தது. இப்போது அதிகமாக இருக்கிறது. அப்போதைய கிரகங்களின் சார்பு நிலை வேறு மாதிரி இருந்தது. இப்போது வேறு மாதிரி இருக்கிறது.
அவ்வளவு ஏன் எல்லா யுகங்களிலும் இதுபோன்ற விதிமீறல்கள் நடந்துள்ளன. எல்லா யுகங்களிலும் துரியோதனன்கள் போன்றோர் இருந்துள்ளனர். என்ன வித்தியாசம் என்றால் இப்போது அதிகமாக இருக்கின்றனர்.
|