முதன்மை பக்கம் > ஆன்மிகம் > ஜோ‌திட‌ம் > க‌ட்டுரைக‌ள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ராகு, கேது பெயர்ச்சி என்றால் என்ன?
ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்:
ராகு, கேது பெயர்ச்சி பொதுவாக என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்தும்.

உலகளவில்

உலகளவில் தற்போதிருந்த மோசமான நிலை மாறும். நல்ல பலன்களை அளிக்கும்.

மக்களிடையே காழ்ப்புணர்ச்சியை விலக்கும். போலித்தனமாக வாழ்க்கையை நீக்கும்.

கடகத்தில் கேது, மகரத்தில் ராகு இருப்பது கொஞ்சம் ஸ்நேகமான போக்கு. எனவே மக்கள் போலித்தனத்தில் இருந்து விலகி நிஜத்திற்கு வருவார்கள்.

இளைஞ‌ர்க‌ள்

கேது ஆன்மீகத்திற்குரிய கிரகம். அது கடகத்தில் உட்கார்ந்திருப்பதால் இளைஞர்கள் மத்தியில் ஆன்மீக ஈடுபாடு அதிகமாகும். யோகா, தியானம் போன்றவற்றில் அவர்களது ஈடுபாடு அதிகரிக்கும்.

மேலும் ராகு மகரத்தில் உட்காருவதால் தொழிற்சாலைகள் பெருகும். தொழில் துவக்குபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

இந்த ராகு, கேது பெயர்ச்சி நாட்டிற்கு நல்லது. ஆனால் கடல் வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து. கடகமும், மகரமும் கடல் வீடுகள். இவற்றில் ராகு, கேது அமர்வதால் மீண்டும் சுனாமி ஏற்படக் கூட வாய்ப்பு உண்டு அல்லது கடல் வாழ் உயிரினங்கள் வெளியேற்றப்படுதல், அறிய உயிரினங்கள் அழிவது, கடல் கொந்தளிப்பு அதிகமாக நிகழும்.

சமூக அளவில்

சாதாரண மக்கள் பலனடைவார்கள். கீழ்த்தட்டு மக்களை உயர்த்தும். அதே சமயம் மேல் தட்டு மக்களை மேலும் உயர்த்தும். அதுதான் ராகு, கேதுவின் குணம்.

தனி மனிதர்

ரிஷப ராசிக்கு யோகத்தைக் கொடுக்கும். சிம்மம் விடுதலையடைகிறார்கள். நிம்மதி பெருமூச்சு விடுவார்கள். கன்னிக்கும் நன்றாக இருக்கிறது. மீன ராசிக்கும் பரவாயில்லை.

ரொம்ப கஷ்டமாக இருக்கப் போவது கடகம், மகரம். எந்த வீடுகளில், கிரகங்களில் இருக்கிறதோ அவர்களுக்கு கஷ்டத்தைக் கொடுக்கும்.

ராகு, கேது அமர்ந்திருக்கும் ராசிக்காரர்களுக்கு ரத்தத் தொடர்பான நோய்கள் வரும். இரும்புச் சத்து குறையும், உடல் பருக்கும், சக்தி குறையும். தலைசுத்தல் ஏற்படும்.
<< 1 | 2 | 3 | 4 
மேலும்
இந்த ஆண்டு கோடைக்காலம் எ‌ப்படி? தண்ணீர் பஞ்சம் ஏற்படுமா?
மாநிலங்களவைத் தேர்தல் எப்படி இருக்கும்?
மனநிலை மாற்றத்திற்குக் காரணம் என்ன?
தில்லை நடராஜர் கோயில் பிரச்சினை எதனால்?
தமிழ்நாடு : தேர்தல் கூட்டணியில் மாற்றம் ஏற்படும்!
பாகிஸ்தான் தேர்தல் ஜனநாயகத்திற்கு ஆதரவான முடிவு வந்திருப்பது?