முதன்மை பக்கம் > ஆன்மிகம் > ஜோ‌திட‌ம் > க‌ட்டுரைக‌ள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
தோஷங்கள், யோகங்கள் என்றால் என்ன?
பிரம்ம ஹத்தி தோஷம் என்பது பெரிதாகச் சொல்லப்படும். குறிப்பாக பிராமணர்களை துன்புறுத்துபவர்களுக்கு இந்த பிரம்ம ஹத்தி தோஷம் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

மேலும், உயிர் பறித்தல், மாற்றான் மனை கவர்தல், கர்ப்பிணிப் பெண்ணை புனர்தல், பண மோசடி செய்தல் போன்றவர்களுக்கும் பிரம்ம ஹத்தி தோஷம் ஏற்படும்.

காமம் தொடர்பான விஷயங்கள்தான் பிரம்ம ஹத்தி தோஷத்தில் ஏராளமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. அதாவது, பெண் ஒருவள் தானே விரும்பி காமத்திற்கு அழைத்து அதனை ஆண் மறுத்தாள் அவனுக்கும் பிரம்ம ஹத்தி தோஷம் ஏற்படும்.

கோயிலுக்கு சொந்தமான நிலம், சொத்துக்களை கையகப்படுத்துதல், அரசு சொத்து, நிலத்தை தன்னுடைமை ஆக்கிக் கொள்பவர்களுக்கும் பிரம்ம ஹத்தி தோஷம் ஏற்படும்.

தசாபுக்தி நன்றாக நடந்தால் அப்போது அவர்கள் தப்பித்துவிடலாம். ஆனால் எந்த நேரத்தில் அவர்களுக்கு தசா புக்தி பலவீனமடைகிறதோ அப்போது அவர்களை பிரம்ம ஹத்தி தாக்கும். அவ்வாறு இல்லாமல் போனாலும், அவர்களுடைய வம்சத்தையே பாதிக்கும்.

பிரம்ம ஹத்தி தோஷம் பிடிக்காத அளவிற்கு கொஞ்சம் ஒழுக்கமாக இருந்து கொள்வது நல்லது.

கன்றுக்கு பால் விடாமல் அனைத்து பாலையும் கறப்பவர்கள், உணவில் விஷம் வைத்து கொள்பவர்களையும், ஊர் குளத்தில் விஷம் கலப்பவர்கள் பிரம்ம ஹத்தி தோஷம் பிடிக்கும்.
1 | 2  >>  
மேலும்
பொது பட்ஜெட்?
கோ பூஜை, கஜ பூஜை எதற்காக செய்யப்படுகிறது?
கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் ஜாதகம் பார்க்காமல் இருப்பதால் எந்த ‌பிர‌ச்‌சினையு‌ம் இ‌ல்லையே?
ராசிகாரர்களுக்கேற்ற வேலை!
மும்பையில் நடக்கும் செயல் ஒவ்வாததாக உள்ளது. இதற்குக் காரணம்?
கருக் கலைப்பு பாவச் செயலாக கருத முடியாது!