ஜோதிட அடிப்படையில் வீட்டில் மீன், செடிகள் வளர்ப்பது பற்றி?
திங்கள், 30 ஜூன் 2008( 16:42 IST )
அகற்றி விட்டுப் பாருங்கள். அவர்களது வருகையும் நின்று விடும்.
ஒரு நல்லதோ கெட்டதோ நிகழ்வு நடப்பதற்கு முன்பு, கெட்ட செடிகொடிகள், கெட்ட விலங்குகள் போன்றவை தானாகவே வீட்டிற்குள் வந்துவிடும். அதன் பிறகு கெட்ட மனிதர்களும் வந்துவிடுவார்கள்.
எனக்கு ஒரு கிறிஸ்தவ நண்பர் இருக்கிறார். அவரது மாமாவிற்கும் பக்கத்து வீட்டாருக்கும் இடையே சண்டை போட்டு ஜெயிலுக்கு போவது வரை ஆகிவிடும்.
webdunia photo
WD
அவரைப் பற்றிக் கேட்டதற்கு மிதுன ராசி என்றார். அவர் லவ் பேர்ட்ஸ் வளர்க்கிறாரா என்று கேட்டேன். ஆமாம் என்றார். அவரது ராசிக்கும், தசா புக்திக்கும் லவ் பேர்ட்ஸ் ஒத்து வராது. முதலில் அவற்றை திறந்துவிடச் சொல்லிவிடு என்று சொன்னேன்.
அவ்வாறே அவரும் செய்தார். அதன் பிறகு எந்த பிரச்சனையும் இல்லை. சண்டை போட்டவர்கள் எல்லாம் நட்பாகிவிட்டார்கள்.
நாய் வளர்ப்பது பற்றி?
நாயை பைரவர் என்கிறோம். அது சூரியனின் ஆதிக்கம். பொதுவாக சிம்ம ராசிக்காரர்கள் நாய் வளர்ப்பது பலம். வீடும் நன்றாக இருக்கும்.
ஆனால் சூரியன் பகையாக இருக்கும் ராசிக்காரர்கள் நாய் வளர்ப்பது சரியாக இருக்காது.
அதாவது கடக ராசிக்கு நாய் வளர்ப்பது சரியாக இருக்காது.துலாம் ராசிக்கு சுத்தமா ஒத்து வராது. தொற்று நோய் பரவுதல், நாயால் பிரச்சினை கடித்தல் போன்றவை ஏற்படும்.
மகரம், கும்ப ராசிக்காரர்கள் நிச்சயமாக நாய் வளர்க்கக் கூடாது. மற்றவர்கள் நாய் வளர்ப்பது சரியாக இருக்கும்.
புகழ்பெற்ற கவிஞர் ஒருவர் கடக ராசிக்காரர் அயல்நாட்டு நாய் ஒன்றை வாங்கி வந்தார். நான் உங்களுக்கு நாய் வளர்ப்பது சரியாக இருக்காது. ஏன் வாங்கினீர்கள் என்று கேட்டேன். அட... பிரான்ஸில் இருந்து வாங்கி வந்தது. கன்னுக்குட்டி மாதிரி இருக்கு என்று சொன்னார். நானும் விட்டுவிட்டேன். 2 மாதத்தில் இறந்துவிட்டது.
எனவே ஒத்து வராதவர்களுக்கு ஒன்று நாய் இறந்துவிடும், நோய் வாய்ப்படும், இவர்களுக்கு நோய் வருவது போன்றவை ஏற்படும்.
செல்லப் பிராணிகள் என்று பார்த்தால் சில ராசிக்காரர்களுக்கு தொல்லைப் பிராணிகளாகி விடும்.