வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 7 ஜனவரி 2019 (06:26 IST)

திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து: தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஜனவரி 28ஆம் தேதி நடைபெறவிருந்த திருவாரூர் தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி மறைவு காரணமாக காலியாக இருந்த திருவாரூர் தொகுதிக்கு வரும் 28ஆம் தேதி தேர்தல் நடத்தவிருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த இடைத்தேர்தலுக்கான வேட்புமனுக்களும் தாக்கல் செய்யப்பட்டு வரும் நிலையில் கஜா புயல் நிவாரண பணிகள் இந்த இடைத்தேர்தலால் பாதிக்கும் என திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் கருத்து தெரிவித்தன

இதனால் திருவாரூர் தொகுதியின் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்ட நிலையில் சற்றுமுன் திருவாரூர் தொகுதிக்கு அறிவிக்கப்பட்டிருந்த இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் திருவாரூர் தொகுதி மக்கள் ஏமாற்றமும், அரசியல் கட்சி தலைவர்கள் கள் நிம்மதியும் அடைந்துள்ளனர்.