ஞாயிறு, 29 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 6 அக்டோபர் 2021 (10:56 IST)

செம்பரம்பாக்கம் ஏரி தண்ணீர் மட்டம் உயர்வு!

சென்னைக்கருகே உள்ள செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் ஒரே நாளில் உயர்ந்துள்ளது.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் முக்கிய இடம் பிடிப்பது செம்பரம்பாக்கம் ஏரி. இதன் ஒட்டுமொத்த கொள்ளளவு 3645 மில்லியன் கன அடி. இப்போது பருவமழை பெய்து வருவதால் ஏரியின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. இப்போது வரை  2,895 மில்லியன் கன அடி நீர் நிரம்பியுள்ளது. அதேபோல நீர்மட்டம் 24 அடியில் 21.15 அடி உயர்ந்துள்ளது.