திங்கள், 30 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வெள்ளி, 22 ஜூலை 2016 (11:19 IST)

8-ஆம் வகுப்பு மாணவியை கழுத்து அறுத்து கொலை செய்த வழக்கு: இருவருக்கு ஆயுள் தண்டனை

வீட்டில் தனியாக இருந்த 8-ஆம் வகுப்பு மாணவி தேஜாஸ்ரீயை கடந்த 2014-ஆம் ஆண்டு கழுத்து அறுத்து கொலை செய்த சம்பவத்தில் இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது சேலம் நீதிமன்றம்.


 
 
2014-இல் இந்த கொலை தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலையை செய்தவர்களை கண்டுபிடிப்பதில் காவல்துறையினர் தீவிரமாக முயற்சி செய்தனர். சினிமா பாணியில் இந்த கொலை குற்றவாளிகளை காவல்துறை கண்டுபிடித்தது.
 
நெடுஞ்சாலையில் உள்ள வீடியோ பதிவை வைத்து தான் காவல்துறை குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்து சேலம் நீதிமன்றம், மாணவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த குற்றவாளிகள் யுகாதித்தன், சசிகுமார் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.