ஞாயிறு, 29 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : வெள்ளி, 16 செப்டம்பர் 2016 (17:49 IST)

ரஜினிக்கு உப்பு பார்சல்: இந்து மக்கள் கட்சி அதிரடி!

ரஜினிக்கு உப்பு பார்சல்: இந்து மக்கள் கட்சி அதிரடி!

காவிரி விவகாரத்தில் இதுவரை கருத்து தெரிவிக்காமல் மௌனமாய் இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக இந்து மக்கள் கட்சி அவருக்கு உப்பு பார்சல் அனுப்பியதாக செய்திகள் வெளியாகி உள்ளது.


 
 
காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட்டதை கண்டித்து கர்நாடகத்தில் பெரும் கலவரம் வெடித்தது. தமிழக மக்கள் தாக்கப்பட்டன, தமிழக உணவகங்கள் தாக்கப்பட்டன, தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள் தாக்கப்பட்டு, தீ வைத்து எரிக்கப்பட்டன.
 
கன்னட வெறியர்களின் இந்த செயலுக்கு பல்வேறு பிரபலங்களும், சினிமா நட்சத்திரங்களும் தங்கள் கண்டனங்களையும், கருத்துக்களையும் தெரிவித்தனர். நடிகர் ரஜினிகாந்த் இந்த விவகாரத்தில் கருத்து சொல்ல வேண்டும் என பரவலாக பேசப்பட்டது.
 
ரஜினி இதில் கருத்து சொல்லுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் அவர் இதுவரை எந்த கருத்தையும் பதிவு செய்யவில்லை. இதற்கு கண்டனம் தெரிவித்து இந்து மக்கள் கட்சி அவருக்கு உப்பு பார்சல்களை அனுப்பியுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
 
இதனை ரயில்வே பார்சல் மூலமாக அனுப்பி இருப்பதாக அந்த கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.