கிரானைட் குவாரிகளில் கொள்ளையடித்ததாக கூறப்பட்ட புகாருக்கான ஆதாரத்தை அமைச்சர் வேலுமணி 15 நாட்களுக்குள் வெளியிட வேண்டும் என்றும் ஆதாரத்தை வெளியிட தவறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தி.மு.க. தென்மண்டல அமைப்பாளரும், மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.