திருச்செந்தூர், வந்தவாசி (தனி) தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் வேட்பு மனுத்தாக்கல் இன்று தொடங்கியது.
மனு தாக்கல் செய்ய டிசம்பர் 2ஆம் தேதி கடைசி நாள். வாக்குப்பதிவு டிசம்பர் 19ஆம் தேதி நடைபெறுகிறது.
தி.மு.க, அ.இ.அ.தி.மு.க ஆகிய இரு கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்துள்ளன. தனியாகப் போட்டியிடப் போவதாகக் கூறியுள்ள தே.மு.தி.க, வேட்பாளர் பட்டியலை விரைவில் வெளியிடுமென எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதான கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துள்ள சூழலில், திருச்செந்தூர், வந்தவாசியில் தேர்தல் பிரசாரம் விரைவில் சூடுபிடிக்கும் என்று தெரிகிறது.