தேசியச் செய்திகள் | உலகச் செய்திகள் | தமிழகச் செய்திகள் | நாடும் நடப்பும் | சு‌ற்று‌ச்சூழ‌ல் | வாசக‌ர் ப‌க்க‌ம் | நே‌ர்முக‌ம் | ‌நி‌தி‌நிலை
முதன்மை பக்கம் » செய்திகள் » செய்திகள் » தமிழகச் செய்திகள் » நீலகிரியில் பலி எண்ணிக்கை 43 ஆனது: பள்ளிகளுக்கு விடுமுறை
Feedback Print Bookmark and Share
 
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை இன்று 43 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டம் முழுவதும் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மலை மாவட்டமான நீலகிரியில் கடந்த 4 நாட்களாக வரலாறு காணாத அளவில் மழை பெய்தது. இதனால் 100க்கும் அதிகமான இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. மழை காரணமாக மாவட்டமே வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. நிலச்சரிவில் சிக்கியும், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டும் இறந்தவர்களின் எண்ணிக்கை இன்று 43 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது மழையின் வேகம் குறைந்துள்ளதால் மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. நீலகிரி மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், ஊரகத் தொழில்துறை அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, கதர்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் பார்வையிட்டனர்.

மாவட்டம் முழுவதும் சாலைப் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளதால் வனத்துறைக்கு சொந்தமான சாலைகளை பொதுமக்களின் போக்குவரத்திற்காக திறந்துவிட அரசு முடிவு செய்துள்ளது. குன்னூரில் 5வது நாளாக மின்சாரம், தொலைத் தொடர்பு சேவை துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்