புதுச்சேரி அருகே தவளக்குப்பம் என்ற இடத்தில் நாட்டு வெடிகுண்டுகளைக் கையாண்ட சிலர் கையாண்ட போது, சில வெடிகுண்டுகள் வெடித்ததில் 2 சிறுவர்கள் உயிரிழந்தனர்.
ஆல்பர்ட், அந்துவான் எனும் 10 வயது சிறுவர்கள் தங்கள் வீட்டிற்கு அருகே ஒரு பையில் கிடந்த நாட்டு வெடிகுண்டுகளை எடுத்த போது, அது வெடித்ததாகவும், இதில் அவர்கள் இருவரும் உயிரிழந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
பலத்த காயம் அடைந்த அவர்களை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, சிகிச்சை பலனின்றி சிறுவர்கள் இருவரும் உயிரிழந்தனர்.
அந்தப் பகுதியில் நாட்டு வெடிகுண்டுகள் எப்படி வந்தன? என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
|