விருதுநகர் அருகே தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை இரயில்வே ஊழியர்கள் தக்க நேரத்தில் கண்டுபிடித்ததால் முத்துநகர் விரைவு இரயில் விபத்தில் இருந்து தப்பியது.
விருதுநகரை அடுத்த அல்லம்பட்டியில் இரயில் தண்டவாளத்தில் இன்று விரிசல் ஏற்பட்டு இருந்ததை இரயில்வே பராமரிப்பு ஊழியர்கள் பார்த்து, உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து சென்னையில் இருந்து தூத்துக்குடி நோக்கி வந்துகொண்டிருந்த முத்துநகர் விரைவு இரயில் விருதுநகர் இரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. இதனால் முத்துநகர் விரைவு இரயில் விபத்தில் இருந்து தப்பியது.
இதைத் தொடர்ந்து தண்டவாள விரிசல் சரிசெய்யப்பட்டது. இதையடுத்து சுமார் 45 நிமிடம் தாமதத்திற்கு பின்னர் முத்துநகர் விரைவு இரயில் புறப்பட்டு சென்றது. |