சட்டப்பேரவையில் இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து பா.ம.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரம் முடிந்த பிறகு பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, பெட்ரோல், டீசல் விலை குறித்து விவாதிக்க அனுமதிக்க வேண்டும் என்று அவைத் தலைவரிடம் கேட்டுக் கொண்டார்.
ஆனால் அவைத் தலைவர் அனுமதி அளிக்க மறுத்து விட்டார். இதனை கண்டித்து பா.ம.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். |