பெட்ரோல், டீசல் விலை உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் தா.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''காங்கிரஸ் அரசு பொறுப்பேற்ற உடன் 100 நாட்களில் துறைவாரியாக பல சாதனை செய்ய போவதாக அறிவித்தது. ஒரு மாதம் கடந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி புதிய சாதனை படைத்துள்ளது. இதனால் எல்லா பொருட்களின் விலையும் உயரும் என்பது வேதனை தருகிறது.
உலகளவில் கச்சா எண்ணெய் விலை இறக்கம் கண்டுள்ள நிலையில் விலையேற்றம் தேவையற்றது. இந்நிலையில் விலை உயர்ந்ததற்கு கண்டனத்தை தெரிவித்து கொள்கிறோம். இந்த விலை உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்'' என்று தா.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார். |