முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள் > ஆசிரியர் நியமன‌த்த‌ி‌ல் அருந்ததியருக்கு ஒதுக்கீடு கோரி வழக்கு
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ஆசிரியர் நியமன‌த்த‌ி‌ல் அருந்ததியருக்கு ஒதுக்கீடு கோரி வழக்கு
ஆ‌சி‌ரிய‌ர் ‌நியமன‌த்‌தி‌ல் அரு‌ந்த‌தியரு‌க்கு உ‌ள்ஒது‌க்‌கீடு வழ‌ங்க கோ‌ரி மதுரை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற ‌‌கிளை‌யி‌ல் வழ‌‌க்கு தொடர‌ப்ப‌ட்டு‌ள்ளது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தங்கமாரியப்பன், செவ்வலூர் முத்தையா, இடையன்குளம் கோவிந்தம்மாள் ஆகியோர் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு‌‌வி‌ல், நாங்கள் அருந்ததியர் வகுப்பை சேர்ந்தவர்கள். ஆதிதிராவிடர்களுக்கான ஒதுக்கீட்டில் அருந்ததியர்களுக்கு 3 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க ஏப்ரல் 29ல் அரசு உத்தரவிட்டுள்ளது.

எனவே அந்த அரசாணையை பின்பற்றி எங்களுக்கு இடைநிலை ஆசிரியர் பணி வழங்க உத்தரவிட வேண்டும் எ‌ன்று மனு‌வி‌ல் கூ‌றி‌யிரு‌ந்தன‌ர்.

இ‌ந்த மனுவை ‌விசா‌‌ரி‌த்த நீதிபதி சத்தியநாராயணன், மனு மீது விசாரணை முடியும் வரை 3 ஆசிரியர் பணியிடங்களை காலியாக வைத்திருக்க ஆசிரியர் தேர்வு வாரிய தலைவருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
விடைத்தாளை கவனக்குறைவாக திருத்திய ஆசிரியர்கள் இடை‌நீ‌க்க‌ம்: பள்ளிக்கல்வி இயக்குனர்
மதுரையில் கூஜா குண்டு பதுக்கிய காவல‌ர் உ‌ள்பட 7 பேர் கைது
ஈழத் தமிழர் போராட்டத்தை கொச்சைப்படுத்துகிறார் கருணாநிதி : நெடுமாறன்
கருணா‌நி‌‌தி‌யி‌ன் பே‌ச்சு அ‌தி‌ர்‌ச்‌சி அ‌ளி‌க்‌கிறது : ராமதா‌ஸ்
இலவச தொலை‌க்கா‌ட்‌சி பெ‌‌ட்டி வழ‌க்கு : ஜெயலலிதா மீதான அப்பீல் வழக்கு ‌‌விசாரணை‌க்கு ஏ‌ற்பு
மறுகூட்டலில் 1184 மதிப்பெண் பெற்ற மாணவரு‌க்கு பரிசு: தங்கம் தென்னரசு