திருச்சி அருகே பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில், 50 ஏக்கர் பரப்பளவில் யானைகள் காப்பகம் அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி அருகே உள்ள எம்.ஆர்.பாளையம் பகுதியில் 300 ஏக்கர் பரப்பளவில் உயிரியல் பூங்கா அமைக்கப்பட உள்ளது. திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையையொட்டி அமைக்கப்பட உள்ள இப்பூங்காவில் 50 ஏக்கர் நிலத்தை யானைகள் காப்பகத்திற்காக ஒதுக்கித் தர தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், உயிரியல் பூங்காவின் இயற்கைத் தன்மைக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் யானைகள் காப்பகம் அமைக்கப்படும் என திருச்சி வனப் பாதுகாவலர் ராமச்சந்திரபதி செய்தியாளர்களிடம் இன்று தெரிவித்தார்.
இயற்கை சூழலும், அபரிமிதமான தண்ணீர் வசதியும் கொண்ட வகையில் அமைக்கப்படும் யானைகள் காப்பகத்தில் ஒரே நேரத்தில் 10 யானைகளை பராமரித்து வளர்க்க முடியும் என்றும் அவர் கூறினார். |