மயிலாடுதுறையில் இருந்து சென்னைக்கு வந்த தனியார் ஆம்னி பேருந்து இன்று அதிகாலை மரக்காணம் அருகே அரசு பேருந்தின் மீது மோதியது. இதில் 5 பேர் உயிரிழந்தனர்.
மயிலாடுதுறையில் இருந்து சென்னைக்கு 35 பயணிகளுடன் வந்து கொண்டிருந்த ஆம்னி பேருந்து, கிழக்கு கடற்கரை சாலையில் கூனிமேடு பகுதியை இன்று அதிகாலை கடந்தது. அப்போது அவ்வழியாக சாலையைக் கடக்க முதியவர் முயன்றார்.
அவர் மீது மோதாமல் தவிர்க்க ஆம்னி பேருந்து ஓட்டுனர் முயன்ற போது, சென்னையில் இருந்து புதுவை நோக்கிச் சென்ற பேருந்து மீது ஆம்னி பேருந்து நேருக்கு நேர் மோதியது.
மோதிய வேகத்தில் 2 பேருந்துகளும் சாலையோரத்தில் இருந்த வயலுக்குள் பாய்ந்தது. இந்த விபத்தில் சாலையைக் கடந்து சென்ற முதியவர் அதே இடத்தில் பலியானார். மேலும் ஆம்னி பேருந்தில் பயணித்த 4 பயணிகள் உயிரிழ்ந்தனர். விபத்தில் காயமடைந்த 8 பேருக்கு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. |