முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
நிதி உதவி செய்த பிறகும் போராடுவது தேவை‌யி‌ல்லாதது: முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி!
''‌வீர‌ப்ப‌ன் தேடுத‌ல் வே‌ட்டை‌யி‌ன் போது பா‌தி‌க்க‌ப்ப‌ட்டவ‌ர்களு‌க்கு ‌நிவாரண உத‌வி செ‌ய்த ‌பிறகு‌ம் போராடுவது தேவை இல்லாதது'' எ‌ன்று முத‌லமை‌ச்ச‌ர் கருணா‌நி‌‌தி கூ‌றினா‌ர்.

சட்ட‌ப் பேரவை‌யி‌ல் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் பா.ம.க. ச‌ட்டம‌ன்ற எ‌தி‌ர்‌க்க‌ட்‌சி‌த் தலைவ‌ர் ஜி.கே.மணி, இ‌ந்‌திய க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி‌யை சே‌ர்‌‌ந்த சிவபுண்ணியம் ஆகியோர் வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்க வேண்‌டு‌ம்.
ஏற்கனவே சிலர் உதவி பெற்றிருந்தாலும் விடுபட்டவர்களுக்கு தேவையான உதவி செய்ய வேண்டும் என்றனர்.

இதற்கு பதில் அளித்து முதலமைச்சர் கருணா‌நி‌தி கூறுகை‌யி‌ல், வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது அதிரடிப்படையினரால் சிலர் பாதிக்கப்பட்டனர். அது பற்றி அறிய நீதிபதி சதாசிவம் தலைமையில் ஒரு விசாரணைக் ஆணைய‌ம் அமைக்கப்பட்டது. அவர்கள் அறிக்கை தரும் முன்பே நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் முதல் கட்டமாக ரூ.20 லட்சம் நிதி கொடுக்கப்பட்டது.

அதற்கபிறகு ஆணைய‌ம் அறிக்ககிடைத்து, அதில் 89 பேரபாதிக்கப்பட்டதாகவும், தமிழகத்தைசசேர்ந்பாதிப்புக்குள்ளானவர்களுக்கஅறிக்கையிலகுறிப்பிட்டஇருந்ததபோநிவாரணமாஒரகோடியே 25 லட்சத்து 50 ஆயிரமரூபாயகொடுக்கப்பட்டரசீதுகளுமபெறப்பட்டு‌ள்ளது.

இவ்வளவு நடந்த பிறகும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி நீதி கேட்டு நெடும் பயணம் என்ற பெயரில் போராட்டம் நடத்துகிறார்கள். தமிழ் நாட்டில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் விசாரணைக் ஆணைய‌ம் கொடுத்த பட்டியல்படி நிதி வழங்கப்பட்டு விட்டது. கர்நாடக அரசு தான் நிதி உதவி வழங்க வேண்டும். எனவே போராட்டம் நடத்த வேண்டும் என்றால் கர்நாடகாவை எதிர்த்து தான் நடத்த வேண்டும்.

இந்த போராட்டம் பற்றி நான் கேள்விப்பட்டதும் தா.பாண்டியனை அழைத்து நிதி கொடுத்த ஆதாரங்களை காட்டினேன். தமிழக எல்லைக்குள் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம் கடமையை செய்து விட்டோம். அதன் பிறகும் ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்பது போல போராட்டம் நடத்துவது சரியான முன் மாதிரி அல்ல.

பிரச்சினை முடிந்து விட்ட பிறகு பிரச்சினை இருப்பதாக கூறி போராடுவது தேவை இல்லாதது என்பதை உறுப்பினர்கள் புரிந்து கொள்ள வேண்டும். யாரயாரபெயரவிடுபட்டதஎன்றதமிழஅரசினகவனத்திற்ககொண்டவந்திருக்கலாம். அதற்காபோராட்டமநடத்துவதநியாயமா?

கர்நாடஅரசஇதமட்டுமகொடுக்கவில்லை. காவிரி முதலஒகேனக்கலவரஎல்லாவற்றையுமதானமறுக்கிறார்கள். அதஉரிமுறையிலபோராடி பெறுவோம் எ‌ன்று முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி கூ‌றினா‌ர்.
மேலும்
சத்துணவு மையங்களில் 10,327 ஊழியர்கள் நியமனம்: பூங்கோதை!
மு‌த்துராம‌லி‌ங்க‌த் தேவ‌ர் ‌சிலை அவம‌தி‌ப்பு: மதுரை‌யி‌ல் பத‌ற்ற‌‌ம்!
த‌மிழக‌த்‌தி‌ல் காவ‌ல்துறை ‌சீர‌ழி‌ந்து ‌கிட‌க்‌கிறது: ஜெயல‌லிதா!
ச‌ட்ட‌ப் பேரவை‌யி‌ல் இரு‌ந்து அ.இ.அ.‌தி.மு.க. வெ‌ளிநட‌ப்பு!
கோ‌யி‌ல் சுவ‌ர் இடி‌ந்து ‌விழு‌ந்து பெ‌ண் ப‌லி!
நூலக‌ங்க‌ள் அனை‌த்து‌ம் க‌ணி‌னி வச‌தி: த‌ங்க‌ம் தெ‌ன்னரசு!