முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தமிழகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ஈரோடு அருகே பயணிகள் கூட்டத்தில் லாரி புகுந்தது இருவர் பலி!
வேலு‌ச்சா‌மி
ஈரோடு அருகே பேருந்துக்காக காத்திருந்த பயணிகள் கூட்டத்தில் லாரி புகுந்ததில் இருவர் பலியானார்கள்.

ஈரோடு அருகே உள்ளது கோபிசெட்டிபாளையம். இதன் அருகே உள்ளது கொளப்பலூர். இங்குள்ள தனியார் நூற்பாலைக்கு செல்ல இப்பகுதி மக்கள் பேருந்திற்காக காத்திருந்தனர். அப்போது அந்த வழியாக தர்மபுரியில் இருந்து கோவை செல்ல வந்த லாரி ஒன்று திடீரென நிலை தடுமாறி பயணிகள் கூட்டத்தில் புகுந்தது.

இதனால் பயணிகள் பதறியடித்தபடி ஓடினர். இத‌ி‌ல் ராமாயாள் (60), கருமாண்டகவுண்டர் (55) ஆகியோர்மீது லாரி சக்கரம் ஏறி சம்பவ இடத்திலேயே இறந்தனர். திருமூர்த்தி (45) படுகாயமடைந்தார். இவரை கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து சிறுவலூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும்
சத்தி அருகே மனைவி, மாமியார் வெட்டிகொலை!
உலக நாடுகளுக்கு இந்தியா 2020ல் தலைமை தாங்கும்: பல்கலை கழக துணைவேந்தர் தகவல்!
ஒகேனக்கல் பிரச்னையில் முதல்வர் மீது பா.ஜ.க குற்றச்சா‌ற்று!
த‌மிழ‌‌ர்க‌ளி‌‌ன் கனவு ‌‌நிறைவே‌றி இரு‌ப்ப‌தி‌ல் ம‌ட்ட‌ற்ற ம‌கி‌ழ்‌ச்‌சி: அர்ஜூன்சிங்குக்கு கருணாநிதி கடிதம்!
பொருளாதாரத்தில் முன்னேறிய பிற்படுத்தப்பட்டோருக்கும் இட ஒதுக்கீடு: வைகோ!
கருணாநிதிக்கு ச‌ட்ட‌ப் பேரவை‌யி‌ல் பாராட்டு தீர்மானம்!