முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > விளையாட்டுச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
இளம் வீரர்களின் கால்பந்து திறனை மேம்படுத்த திட்டம்!
இந்தியாவில் இளம் வீரர்களின் கால்பந்தாட்டத் திறனை மேம்படுத்தும் வகையில் தீக்சா ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் நிறுவனம் உலகளவில் முதலிடத்தில் உள்ள கால்பந்து பயிற்சி நிறுவனமான கோய்ர்வெர் கோச்சிங் உடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

கடந்த 2004 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட தீக்சா ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் நிறுவனம் தற்போது சர்வதேச அளவிலான போட்டிகளில் இளம் வீரர்களை பங்குப்பெறச் செய்யும் வகையில் வளர்ந்துள்ளது. இது கோய்ர்வெர் கோச்சிங் நிறுவனத்துடன் மேற்கொண்டுள்ள ஒப்பந்தத்தையடுத்து, வரும் 7 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை இந்தியாவில் பயிலரங்கை நடத்த உள்ளது.

இந்த 8 நாள் பயிலரங்கில் மூன்று சர்வதேச தொழில் நெறிஞர்கள் தங்களது அனுபவங்களை கால்பந்து பயிற்சியாளர்களுக்கு வழங்க உள்ளனர். மேலும் 9 முதல் 18 வயது வரையிலான வீரர்களுக்கு ஐந்து நாட்கள் வீதம் இரண்டு பயிற்சி முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இவற்றில் கோய்ர்வெர் கோச்சிங் நிறுவனத்தைச் சேர்ந்த பால் கிப்பான்ஸ், நிக் கேட்ஸ் ஆகிய தொழில் நெறிஞர்கள் இடம் பெறுகின்றனர்.

இவர்களிடம் கடந்த சில ஆண்டுகளாக தீவிர பயிற்சி பெற்ற சீய்ன் மில்லிங்டன், பிரோம்விச் அல்பியான் ஆகியோரும் பயிற்சியாளர்களுக்கும், இளம் வீரர்களுக்கும் பயிற்சி அளிக்க உள்ளனர்.
மேலும்
பிசிசிஐ ‌மீது டால்மியா வழக்கு!
அடுத்த கூட்டம் வரை கவாஸ்கர் நீடிப்பார்
டால்மியா கைது! பிணையில் விடப்பட்டார்!
ஆஸி.தொடரை புறக்கணிப்போம்-பாக் அச்சுறுத்தல்
மன்ஜித் கெளர் பயிற்சிபெற அமெரிக்க செல்கிறார்!
சிறந்த உள் நாட்டு வீரராக யூசுஃப் பத்தான் தேர்வு