முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை சுரங்க முறைகேடு வழக்கில் இருந்து விடுவி்த்து கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சவுத் வெஸ்ட் மைனிங் கம்பெனி என்ற நிறுவனத்திற்கு சுரங்க பணிகளை மேற்கொள்ள பணம் பெற்றதாக எடியுரப்பா மீது குற்றம்சாட்டப்பட்டது. இதற்காக எடியுரப்பா குடும்பத்தினர் நடத்தி வரும் அறக்கட்ளைக்கு 10 கோடி ரூபாயை அந்த நிறுவனம் அளித்தாகவும் கூறப்பட்டது
மேலும் ராஷனகல்லி என்ற இடத்தில் நிலம் வாங்க எடியுரப்பா குடும்பத்தினருக்கு சவுத் வெஸ்ட் மைனிங் நிறுவனம் 20 கோடி ரூபாய் கொடுத்ததாகவும் புகார் எழுந்தது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் லோக் ஆயுக்தா அறிக்கையை அடுத்து எடியூரப்பா மீது வழக்குப்பதிவு செய்ய மாநில ஆளுநர் பரத்வாஜ் அனுமதி அளித்தார். இதனையடுத்து அவர் மீது வழக்குப்பதிவானது. அவரது முதல்வர் பதவியும் பறிபோனது.
இது தொடர்பான வழக்கு இன்று கர்நாடக உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது லோக் ஆயுக்தா அறிக்கை படி சுரங்க முறைகேட்டில் எடியூரப்பா மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது தவறு என நீதிபதிகள் பக்தவச்சலம், கோவிந்தராஜ் கொண்ட அமர்வு உத்தரவிட்டது.