2ஜி வழக்கு: சிதம்பரத்தை சேர்க்காததை எதிர்த்து சுவாமி மேல்முறையீடு
வியாழன், 23 பிப்ரவரி 2012( 13:44 IST )
PIB
2ஜி வழக்கில் சிதம்பரத்தை குற்றவாளியாக சேர்க்க கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சுப்ரமணிய சாமி மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார்.
ஸ்பெக்ட்ரம் வழக்கில் உள்துறை அமைச்சர் சிதம்பரத்தை குற்றவாளியாக சேர்க்க கோரிய மனுவை தள்ளுபடி செய்ததை தொடர்ந்து உச்ச நீதி மன்றத்தில் ஜனதா கட்சி தலைவரான சுப்ரமணிய சாமி வழக்கு தொடர்ந்துள்ளார்.
2G வழக்கில் சிதம்பரத்தை சேர்க்க கோரும் மனுவை விசாரித்த டெல்லி பாட்டியாலா சிபிஐ நீதிமன்றம் சுப்ரமணிய சாமியின் மனுவை தள்ளுபடி செய்திருந்தது.
இந்நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரமணிய சாமி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார்.