ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்கட்டமாக 26 தொகுதிகளில் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கி வாக்குப்பதிவு மாலை 3 மணி நடைபெறுகிறது.
முதல்கட்ட வாக்குப்பதிவுக்கு போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஹெலிகாப்டர் மூலம் கண்காணிக்கும் பணி ஏற்கனவே துவங்கிவிட்டது என்று அந்த மாநில இணை தலைமை தேர்தல் அதிகாரி ஏ.கே. சின்ஹா தெரிவித்துள்ளார்.