தேசியச் செய்திகள் | உலகச் செய்திகள் | தமிழகச் செய்திகள் | நாடும் நடப்பும் | சு‌ற்று‌ச்சூழ‌ல் | வாசக‌ர் ப‌க்க‌ம் | நே‌ர்முக‌ம் | ‌நி‌தி‌நிலை
முதன்மை பக்கம் » செய்திகள் » செய்திகள் » தேசியச் செய்திகள் » மசூதி இடிப்பு அறிக்கை வெளியீடு: லிபரான் மறுப்பு (I am not a person who will leak the report: Liberhan)
Feedback Print Bookmark and Share
 
பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நீதிபதி எம்.எஸ். லிபரான் தலைமையிலான ஆணையத்தின் அறிக்கை பத்திரிகையில் வெளியானதால், மிகுந்த வருத்தத்தில் ஆழ்ந்த நீதிபதி லிபரான், அறிக்கையை பத்திரிகைகளுக்கு வெளியிடும் குணம் படைத்தவன் தான் அல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.

சண்டிகரில் தனது வீட்டில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், தனது அறிக்கை பத்திரிகைகளில் உள்ளதால் அதுகுறித்து தான் எதுவும் பேசப்போவதில்லை என்று கூறினார்.

பத்திரிகைகளுக்கு அறிக்கையை கொடுத்தது யார் என்றும், எங்கிருந்து அவர்கள் அறிக்கையை பெற்றார்கள் என்றும் சம்பந்தப்பட்ட பத்திரிகைகளிடம் தான் கேட்டறிய வேண்டும் என்றார்.

லிபரான் அறிக்கையை வேண்டுமென்றே மத்திய அரசு வெளியிட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் குறைகூறுவது குறித்தும் கேட்டபோது, அவர் மிகுந்த எரிச்சல் அடைந்தார்.

தனது குணாதிசயம் குறித்து சந்தேகப்பட வேண்டாம். நீங்கள் செல்லலாம் என்று செய்தியாளர்களைப் பார்த்து கோபத்துடன் கூறினார் லிபரான்.

லிபரான் அறிக்கை குறித்து ஊடகங்களுடன் பேசக்கூடிய நபர் தான் அல்ல என்றும், அதுபற்றி பேச விரும்பவில்லை என்றும் நீதிபதி லிபரான் தெரிவித்தார்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்