தேசியச் செய்திகள் | உலகச் செய்திகள் | தமிழகச் செய்திகள் | நாடும் நடப்பும் | சு‌ற்று‌ச்சூழ‌ல் | வாசக‌ர் ப‌க்க‌ம் | நே‌ர்முக‌ம் | ‌நி‌தி‌நிலை
முதன்மை பக்கம் » செய்திகள் » செய்திகள் » தேசியச் செய்திகள் » அஸ்ஸாமில் தொடர் குண்டு வெடிப்பு : 6 பேர் பலி ; 50 காயம் (Six killed, 50 injured as three blasts rock Assam)
Feedback Print Bookmark and Share
 
அஸ்ஸாம் மாநிலத்தில் இன்று காலை 10.15 மணிக்கு நிகழ்ந்த மூன்று குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 6 பேர் பலியாகினர் ; 50 க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

லோயர் அஸ்ஸாமில் உள்ள நல்பாரி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தின் வெளியே இந்த முதல் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.

அங்கு நிறுத்தப்பட்டிருந்த சைக்கிள் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக குண்டுகள் வெடித்துச் சிதறியதாக காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அதற்கடுத்த குண்டு காவல் நிலையத்திலிருந்து 20 மீட்டர் தொலைவிலும், மூன்றாவது குண்டுவெடிப்பு அருகிலுள்ள மார்க்கெட் ஒன்றிலும் அடுத்தடுத்து நிகழ்ந்தது.

உல்ஃபா தீவிரவாதிகள் இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு காரணமாக இருக்கலாம் என போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

தலைநகர் கவுகாத்தியிலிருந்து 70 கிலோ மீட்டர் தொலைவில் நல்பாரி மாவட்டம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்