கொல்கட்டா: நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டு வரும் மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் தீவிரவாதிகள் நிபந்தனைகளுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார் என அறிவித்துள்ளனர்.
மேற்கு வங்காள மாநிலத்தில் தான் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் அதிக அளவில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
இந்த தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காக துணை ராணுவப்படை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், `மாவோயிஸ்டுகளுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்க மாட்டோம். ஆயுதங்களை கைவிட்டு அவர்கள் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும்' என பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்த சூழ்நிலையில், சில நிபந்தனைகளுடன் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் தெரிவித்துள்ளனர்.