கேரள மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரிடையே ஏற்பட்டுள்ள ஒற்றுமையின்மை குறித்து ஆலோசிப்பதற்காக அக்கட்சியின் அரசியல் தலைமைக் குழு கூட்டம் புதுடெல்லியில் இன்று கூடியது.
கேரள முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன், மாநில மார்க்சிஸ்ட்செயலாளர் பினாராய் விஜயன் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
அச்சுதானந்தனும், விஜயனும் தாங்கள் தனித்தனியாக தயாரித்துள்ள அறிக்கையை இந்தக் கூட்டத்தில் வெளியிடுவார்கள் என்று மார்க்சிஸ்ட் வட்டாரங்களை மேற்கோள்காட்டி தகவல்கள் தெரிவிக்கின்றன.
அகில இந்திய பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத், ராமச்சந்திரன் பிள்ளை, பிமன் போஸ் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
|