கர்நாடக மாநிலம் மைசூரில் பாஜக இளைஞர் பிரிவைச் சேர்ந்த ஒருவர் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்பு அழைப்பு விடுத்திருந்த வேலைநிறுத்தப் போராட்டம் ஓரளவு பாதிப்பை ஏற்படுத்தியது.
இதனிடையே மசூதி தாக்குதலுக்குள்ளான சம்பவத்தைத் தொடர்ந்து மைசூர் புறநகர்ப்பகுதியான உதயகிரியில் பதற்றம் நீடித்தது.
மைசூரில் ஒரு சில பேருந்துகள் இயக்கப்பட்டன. சில தனியார் பேருந்துகளும், ஆட்டோக்களும் இயக்கப்பட்டன.
வன்முறை மற்றும் கத்திக்குத்து சம்பவங்கள் தொடர்பாக சிலரை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்து ஜாக்ரன் வேதிகா என்ற அமைப்பின் சார்பில் மைசூரில் இன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.
பாஜக-வைச் சேர்ந்த வாஜித் என்ற இளைஞர் நேற்று மாலை தாக்கப்பட்டதைக் கண்டித்து இந்த வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.
|