முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தேசியச் செய்திகள் > அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம்
தெற்கு காஷ்மீரில் இமயமலைப் பகுதியில் அமைந்துள்ள அமர்நாத் குகைக் கோயிலுக்கு செல்லும் யாத்திரை, பஹல்காம் பகுதியில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக, இன்று ஜம்முவில் இருந்து யாத்ரிகர்கள் புறப்படுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மோசமான வானிலை காரணமாக ஜம்முவில் இருந்து யாத்திரையை அனுமதிக்கக் கூடாது என்று அமர்நாத் கோயில் வாரியம் உள்ளூர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

பஹல்காமில் உள்ள நுன்வான் அடிவார முகாமில் யாத்ரிகர்கள் கூட்டத்தை தவிர்க்கும் வகையில், ஜம்முவில் இருந்து புதிய குழுவை அனுப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரை தொடங்கியதில் இருந்து பலமுறை பனிப்பொழிவு உள்ளிட்ட காரணங்களினால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
ஷோபியான் வழக்கு: உடல்களை தோண்டியெடுக்க உத்தரவு
காஷ்மீர்: 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
சித்தூர் அருகே ‌விப‌த்து : பள்ளி குழந்தைகள் 5 பேர் பலி
புதுட‌ெ‌ல்‌லி‌யி‌ல் இ‌ன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்‌ட் பொலிட்பீரோ கூட்டம்
இந்தியாவுக்கு உலக வங்கி ரூ. 10,560 கோடி கடனுதவி
ரயில்வே துறை தனியார்மயமாகாது- மம்தா