ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் குப்வாரா மாவட்டத்தில் வெட்டர் பாலா வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்று வரும் துப்பாக்கிச் சண்டையில், 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
வனப்பகுதியில் தீவிரவாதிகள் மறைந்திருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, அப்பகுதியை சுற்றி வளைத்த பாதுகாப்புப் படையினர், தீவிரவாதிகளை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
தீவிரவாதிகளும் பதிலுக்கு தாக்குதல் நடத்தினர். இதையடுத்து சிறிது நேரம் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 2 பேரும் காயம் அடைந்தனர்.
தொடர்ந்து அப்பகுதியில் மோதல் நீடித்து வருவதாகவும் அவர் கூறினார்.
தீவிரவாதிகள் மறைவிடத்தில் இருந்து ஆயுதங்களும், வெடிமருந்துப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
|