முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தேசியச் செய்திகள் > சித்தூர் அருகே ‌விப‌த்து : பள்ளி குழந்தைகள் 5 பேர் பலி
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
சித்தூர் அருகே ‌விப‌த்து : பள்ளி குழந்தைகள் 5 பேர் பலி
ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே ப‌ள்‌ளி குழ‌‌ந்தைகளை ஏ‌ற்‌றி‌ச் செ‌ன்ற ஆ‌ட்டோ ‌மீது லா‌ரி மோ‌தி‌க் கொ‌ண்ட ‌விப‌த்த‌ி‌ல் 5 குழ‌ந்தைக‌ள் ப‌லியானா‌ர்க‌ள்.

சி‌த்தூ‌ர் மாவட்டம் கல்லு பள்ளிக்கு இன்று காலை ஆட்டோ ஒன்று பள்ளி குழந்தைகளை ஏற்றி சென்று கொ‌ண்‌டிரு‌ந்தது. அப்போது அந்த பகுதியில் வேகமாக வந்த லாரி ஒ‌ன்று ஆட்டோ மீது பய‌ங்கரமாக மோதியது.

இ‌தி‌ல் 2 குழந்தைகள் ‌நிக‌ழ்‌விடத்திலேயே உ‌யி‌ரிழ‌ந்தன‌ர். படுகாய‌ம் அடை‌ந்து மரு‌த்துவமனை‌யி‌ல் அனுமத‌ி‌க்க‌ப்ப‌ட்ட 3 குழ‌ந்தைக‌ள் சிகிச்சை பலனின்றி இறந்தனர். மேலும் 10 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இ‌ந்த ‌விப‌த்து கு‌றி‌த்து காவ‌ல்துறை‌யின‌ர் வழ‌க்கு‌ப் ப‌திவு செ‌ய்து ‌விசாரணை நட‌த்‌தி வரு‌கி‌ன்றன‌ர்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
புதுட‌ெ‌ல்‌லி‌யி‌ல் இ‌ன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்‌ட் பொலிட்பீரோ கூட்டம்
இந்தியாவுக்கு உலக வங்கி ரூ. 10,560 கோடி கடனுதவி
ரயில்வே துறை தனியார்மயமாகாது- மம்தா
நீதிபதியை மிரட்டிய மத்திய அமைச்சரை நீக்க அதிமுக கோரிக்கை
மே.வங்க சட்டசபைத் தேர்தலை குறிவைத்து ரயில்வே பட்ஜெட்
லால்காருக்குள் நுழைய முயன்ற மேதா பட்கர் கைது