ரயில் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்துவதே இந்திய ரயில்வேயின் முன்னுரிமையாக இருக்கும் என்றும், முக்கிய திட்டங்களுக்கு ஆக்கப்பூர்வ நிதியுதவி அளிப்பது குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும் என்று மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
ரயில்வே நிதிநிலை அறிக்கையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் சில முக்கிய அம்சங்கள்:
ரயில்வே கண்ணாடி இழை நெட்வொர்க்கை பயன்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய சாம் பிட்ரோடா தலைமையில் குழு அமைக்கப்படும்.
முக்கிய நகரங்களுக்கு இடையே செல்லும் ரயில்களில் இரு அடுக்கு (Double - decker) ரயில் பெட்டிகள் அறிமுகப்படுத்தப்படும்.. |