நாடு முழுவதும் முக்கிய ரயில் நிலையங்களில் பல்முனை ஷாப்பிங் செய்யும் வணிக வளாகங்கள் அமைக்கப்படும். ஷாப்பிங் மட்டுமல்லாது புத்தக நிலையங்களும் ஏற்படுத்தப்படும் என்று ரயில்வே நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசிய மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மக்களவையில் இன்று ரயில்வே நிதிநிலை அறிக்கையை அவர் தாக்கல் செய்தார்.
ரயில்வே பட்ஜெட்டில் முக்கிய அம்சங்கள் வருமாறு:
மும்பை சிஎஸ்டி, நாக்பூர், புனே, புதுடெல்லி, அம்ரிஸ்டர் ஆகிய ரயில் நிலையங்கள் உட்பட சுமார் 50 ரயில் நிலையங்கள் உலகத் தரத்திற்கு மேம்படுத்தப்படும்.
ரயில் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்தும் வகையில், சுகாதாரம், தரமான உணவு, சுத்தமான கழிவறை வசதிகள் வலியுறுத்தப்படும்.
சமூக அடிப்படையிலான ரயில் திட்டங்களுக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படும்.
ரயில்வே பட்ஜெட் மக்களுக்கான, மக்களால் உருவாக்கப்பட்டுள்ளது என்று மம்தா பானர்ஜி கூறினார். |