கர்நாடக மாநிலம் மைசூர் அருகே உதயகிரியில் நேற்றிரவு நிகழ்ந்த வன்முறையில் 2 பேருக்கு கத்திக்குத்து காயம் ஏற்பட்டது. அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
முன்னதாக உதயகிரிக்கு அருகேயுள்ள மசூதி சேதப்படுத்தப்பட்டதாக வெளியான தகவலைத் தொடர்ந்து இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலிலை தொடர்ந்து காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 3 பேர் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து காவல்துறையினர் குவிக்கப்பட்டு வன்முறை கட்டுப்படுத்தப்பட்டது.
இதற்கிடையே நேற்றிரவு அப்பகுதியில் மீண்டும் வன்முறை வெடித்தது. 2 பேருக்கு கத்திக்குத்து காயம் ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
உதயகிரி பகுதியில் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டு தீவிர ரோந்துப் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
|