கர்நாடக மாநிலத்தில் புறக்கணிக்கப்பட்ட 200 கோயில்களை புதுப்பிக்க 100 நாள் செயல்திட்டம் ஒன்றை அம்மாநில அரசு செயல்படுத்த முடிவு செய்துள்ளதாக மாநில சமய அறக்கட்டளை மற்றும் வீட்டுவசதித் துறை அமைச்சர் வி. சோமண்ணா தெரிவித்தார்.
பெங்களூருவில் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த திட்டத்தை முதல்வர் பி.எஸ். எடியூரப்பா வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி தொடங்கி வைப்பார் என்று கூறினார்.
இந்த திட்டத்திற்காக 200 கோயில்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், 20 லட்சம் ரூபாய் செலவிடப்படும் என்றும் அமைச்சர் கூறினார். |