உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவில் பகுஜன் சமாஜ் கட்சியின் நினைவுச் சின்னங்கள், சுற்றுலாப் பயணிகளுக்கு அடுத்த 6 மாத காலத்திற்குள் திறந்து விடப்படும் என்று அம்மாநில முதல்வர் மாயாவதி கூறியிருக்கிறார்.
லக்னோவில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், பி.எஸ்.பி-யின் பூங்காக்களை சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பிரபலப்படுத்த நாடுதழுவிய பிரசாரத்தை உத்தரப்பிரதேச அரசு மேற்கொள்ளும் என்று கூறினார்.
இந்த நினைவுப் பூங்காக்களில், மாயாவதியின் சிலை, பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனர் கன்சிராம், டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் சிலைகளும், பி.எஸ்.பி-யின் சின்னமான யானை சின்னம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
நினைவுச் சின்னங்கள் என்று தாம் கூறியதை எதிர்க்கட்சிகள் தவறாகப் புரிந்து கொண்டதாகக் கூறிய அவர், இதுபோன்ற நினைவிடங்கள் அமைக்க மாநில சட்டசபையில் பட்ஜெட் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றார்.
|