முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தேசியச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
இந்திய தனி நபர் உணவு அளவு அமெரிக்காவை விட குறைவு!
''இந்தியர்களின் தனி நபர் உணவு அளவு அமெரிக்க தனி நபர் உணவு அளவைக் காட்டிலும் குறைவாகவே உள்ளது'' என்று மத்திய உணவுத் துறை அமைச்சர் ஷரத் பவார் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் உணவு தானியங்களின் பற்றாக்குறை மற்றும் விலை ஏற்றத்திற்கு இந்தியர்களின் அதிகரித்துள்ள உணவுப் பழக்கவழ‌க்கமே காரண‌ம் என்று கூறிய கருத்திற்கு பதிலளித்த ஷரத் பவார் இவ்வாறகூறியுள்ளார்.

"உணவு மற்றும் வேளாண் அமைப்பின் உலக உணவு தானிய சந்தை அறிக்கை நிலவரப்படி 2007- 08ஆம் ஆண்டில் அமெரிக்காவின் உணவு தானிய நுகர்வு 11.81 விழுக்காடு அதிகரித்து 310.4 மில்லியன் டன்களாக அதிகரித்துள்ளது.

மாறாக இந்தியாவில் உணவுத் தானிய நுகர்வு இதே காலக் கட்டத்தில் வெறும் 2.17 விழு‌க்காடே அதிகரித்து 197.3 மில்லியன் டன்களாக உள்ளது.

அமெரிக்காவில் கோதுமை பயிர் நிலங்கள் டீசல் உற்பத்திகான தானியக் களமாக மாற்றப்பட்டுள்ளதால் உலக அளவில் கோதுமைப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் விவசாய நிலங்கள் ஒரு போதும் டீசல் உற்பத்திக்கு பயன்படுத்தப்படுவதில்லை".

இவ்வாறு ஷரத் பவார் கூறியுள்ளார்.
மேலும்
உல்ஃபா தீவிரவாதிகள் 2 பேர் பலி!
க‌ர்நாடக‌‌‌ம்: 89 தொகு‌திக‌ளி‌ல் ‌பிர‌ச்சார‌ம் ஓ‌ய்‌ந்தது!
ஜ‌ம்மு: ஆ‌ற்‌றி‌ல் பேரு‌ந்து க‌வி‌ழ்‌ந்து 25 பே‌‌ர் ப‌லி!
அணுச‌க்‌தி உட‌ன்பாடு செ‌த்து‌வி‌ட்டது: இடதுசா‌ரிக‌ள்!
இராமர் பாலமா? மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் ஆலோசனை!
எ‌ய்‌ம்‌ஸ் இய‌க்குநராக ‌மீ‌ண்டு‌ம் பத‌வியே‌ற்றா‌ர் வேணுகோபா‌ல்!