முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தேசியச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
விலைவாசி உயர்வு: கடை அடைப்பு!
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தவறியதை கண்டித்து மேற்கு வங்க மாநிலத்தில் இன்று 12 மணி நேர மாநிலம் தழுவிய கடை அடைப்பு போராட்டம் தொடங்கியது.

உணவுப் பொருட்கள் உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய அரசும், மாநில அரசும் தவறிவிட்டன என்று மம்தா பாணர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும், இந்திய சோஷலிச ஐக்கிய மையமும் (எஸ்.யூ.சி.ஐ) இணைந்து கடை அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன.

இந்த 12 மணி நேர கடை அடைப்பு போராட்டம் காலை 6 மணிக்கு துவங்கியது.

கடை அடைப்பு போராட்டத்தை பற்றி மம்தா பானர்ஜி கூறுகையில், நாங்கள் விலை உயர்வு குறித்து தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வந்த போதிலும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க தவறிவிட்டன. மத்திய அரசு விலை உயர்வால் மக்கள் படும் கஷ்டங்களை போ‌க்க தவறிவிட்டது. இதனால் மாநிலம் தழுவிய கடை அடைப்பு போராட்டம் நடத்துகின்றோம்.

விலை உயர்வால் பொதுமக்களுக்கு கடுமையான சுமை ஏற்பட்டுள்ள நிலையிலும், இதை பற்றி கவலைப்படாமல் இருக்கின்றனர். பணவீக்கம் அதிகரித்து கொண்டு வருகிறது. இதற்கு மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாநில அரசும் கவலைப்படாமல் இருக்கின்றது என்று கூறினார்.
மேலும்
27 ‌விழு‌க்காடு இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டே அமல்படுத்த மத்திய அரசு உத்தரவு!
இல‌ங்கை இன‌ப் ‌பிர‌‌ச்சனை‌யி‌ல் தலை‌யிட வே‌ண்டு‌ம்: ‌பிரதம‌ரிட‌‌ம் ராமதா‌ஸ் வ‌லியுறு‌த்த‌ல்!
குடும்ப நீதிமன்றங்கள்-பிரதமர் வலியுறுத்தல்!
சரப்ஜித் சிங்கிற்கு பாகிஸ்தான் கருணை காட்டவேண்டும்: பிரணாப் வேண்டுகோள்!
‌‌கி‌ரீ‌மி லேயரு‌க்கு இட ஒ‌து‌க்‌கீடு இ‌ல்லை: ம‌த்‌திய அரசு முடிவு!
பெட்ரோல் நிலையத்தை மாவோயிஸ்ட் தகர்ப்பு!