மனித உரிமை மீறல்கள் நடந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை
புதன், 28 ஏப்ரல் 2010( 13:41 IST )
கடந்த 5 வருடங்களில் பெரியளவிலான மனித உரிமை மீறல்கள் இடம்பெற்ற உலக நாடுகளில் ஒன்றாக இலங்கை உள்ளது என்று சிறுபான்மையினரின் உரிமைகளுக்கான சர்வதேச குழு (Minority Rights Group International)அறிவித்துள்ளது.
சர்வதேச மனித உரிமைகள் நிலைமைகள் குறித்து இந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், கடந்த 5 வருட காலப் பகுதியில் உலகின் பல நாடுகளில் மனித உரிமை மீறல் நிகழ்வுகளும், மனிதப் பேரவலங்களும் பெரிதும் இடம்பெற்றுள்ளன.
குறிப்பாக இலங்கை, பாகிஸ்தான், ஏமன் ஆகிய நாடுகளில் இம்மனித உரிமை மீறல்களும், மனிதப் பேரவலங்களும் அரங்கேறின.
சோமா லியா, சூடான், ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளிலும் சிறுபான்மை மக்கள் நிம்மதியாக இயல்பு வாழ்க்கை வாழ முடியாத சூழலே காணப்படுகின்றது என்று கூறப்பட்டுள்ளது.