' இந்தியா 2050 ல் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக திகழும் '
நியூயார்க் , சனி, 21 நவம்பர் 2009( 18:51 IST )
வருகிற 2050 ஆம் ஆண்டில் இந்தியா, உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக திகழும் என அமெரிக்காவைச் சேர்ந்த அந்நாட்டின் அயலுறவுக் கொள்கைக்கான பிரபல சிந்தனையாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.
" 2050 ல் ஜி 20 ' என்ற தலைப்பின் கீழ் அந்த அமைப்பு சார்பில் வெளியிடப்பட்ட கட்டுரை ஒன்றில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2050 ஆம் ஆண்டு உலக அளவில் சீனா மற்றும் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக மூன்றாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா திகழும் என அதில் கூறப்பட்டுள்ளது.